Description
Our First Book Tamil language
“இறவாத தமிழ்நூல்கள் தமிழ் மொழியில் செய்திடல் வேண்டும்”.
என்ற பாரதியின் வாக்கிற்கேற்ப இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது. பழந்தமிழரின் வாழ்வில் அணுவில் தொடங்கி அண்டம் வரையிலும் பரவிக் கிடக்கின்றது.
அறிவியல் என்ற சொல்லிற்கு விஞ்ஞானம் நுணங்கியல் , இயல் நூல் , ஆய்வுத்துறை அறிவு பொருளாய்வுத்துறை , புறநிலை ஆய்வு நூல் , அறிவு பற்றிய துறை , ப௫ப்பொ௫ளை ஆய்வு நூல் தொகுதி என பலவாறான பொருள்கள் அகராதியில் சுட்டப்பட்டுள்ளது.
மனித இனம் வாழ்வு , வளம் , நலம், பண்பு , வசதிகள் என யாவும் பெற்று மேனிலையடைவதற்கு உறுதுணையாய் இருப்பது அறிவியல். இவ் அறிவியலில் தாவரவியல் எனப் பல துறைகள் உள்ளன. இவற்றுள் கலை சார்ந்த அறிவியலாக இலக்கியங்கள் சிறந்து விளங்குகின்றன.
நம் தாய்மொழியாம் தமிழ்மொழியில் தோன்றிய இலக்கியங்கள் பல்துறை சார்ந்த அறிவியல் கூறுகளை உள்ளடக்கியது.
இலக்கியம் என்பது வெறும் இரசனைக்குரிய ஒன்றாக மட்டும்மில்லாமல் அணுபவமும் அறிவியலும் கலந்த படைப்பாக மிளிர்கின்றது அன்றைய தமிழர்கள் தங்கள் இலக்கியங்க்களில் கண்ட கனவுகளே இன்று நடைமுறையில் உருவாகி வளர்ந்துள்ளன. மேலும் அறிவியலின் ஆணிவேராக நம் பழந்தமிழரின் வாழ்கை முறை அமைத்துள்ளது அவற்றை எடுத்துரைக்கும் முறையில் அவ் இலக்கியங்கள் கருத்துக்களைச் சுட்டிக்காட்டுகின்றன என்றால் மிகையாகாது.
இலக்கியங்கள் புராணம் , இதிகாசம் , காப்பியம் , அகபுற இலக்கியம் , அற இலக்கியம் , பக்தி இலக்கியம் , இலக்கணம் , நாடகம் , நாவல் , சிறுகதை , புதுக்கவிதை எனப் பல வடிவங்கள் பெற்று வளர்ந்து வந்துள்ளது. மேற்கூறிய இலக்கிய வகை அல்லது வடிவங்களில் இயற்றப்பட்ட நூல்களுள் அறிவியல் கூறுகள் பொதிந்து காணப்படுகின்றன என்பதை எடுத்துக்கூறும் நூலாக இந்நூல் அமைந்துளது.
உலகபஂ பொதுமறை என்று அனைவராலும் போற்றப்படும் திருக்குறளில் அறிவியல் மற்றும் தகவல் தொடர்பு சிந்தனைகள் எவ்வாறமைந்துள்ளது என்றும் , இதிகாசங்களில் சிறப்பாகப் போற்றப்படும் இராமாயணத்தில் கம்பர் தம் படைப்பில் எப்படிப்பட்ட அறிவியல் சிந்தனைகளை வெளிப்படுத்தி உள்ளார் என்பதையும் , சங்க இலக்கியங்களில் அமைந்துள்ள புற இலக்கியங்களில் அறிவியல் மற்றும் தகவல் தொடர்பு செய்திகளை எவ்வாறு புலப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும், காப்பியங்களில் அறிவியல் கருத்துகள் எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பதையும்,பக்தி இலக்கியமான திருவாசகத்தில் பக்தியோடு அறிவியல் எவ்வாறு ஊடாடி வருகின்றது என்பதையும் விளக்கிக் கூறுவதாக இந்நூல் அமைந்துள்ளது.
Reviews
There are no reviews yet.